கி.ரா என்றொரு அதிசயம்😇
நைநா என்று அன்புடன் அழைக்கின்றனர்
எந்த அப்பாவும் சொன்னதில்லை , பொருள் சேர்க்காதே...சேர்த்து வைக்கும் எறும்பும் தேனியும் பறிகொடுக்கும் என்று ... அதிசய அப்பா நீங்கள்.
தாத்தா என்று கூப்பிட்டு நேசிக்கும் பேரன்பேத்திக்கு எந்த தாத்தாவும் சொல்லப் போவதுமில்லை
பறவைகள் என்ன திருமணமா செய்துகொள்கிறது? பறவையை போல் வாழ் என்று....அதிசய தாத்தா நீங்கள்.
பேசக்கூடாததை பேசி வழக்குகள் வாங்குவோர் மத்தியில் அச்சிலேற்ற முடியாததை கைப்பிரதியாய் எழுதிய அதிசய அண்டரெண்டபட்சி நீங்கள் .
7வது படித்த வேறெவராவது பேராசிரியர் ஆக முடியுமா?!?! அறிவின் அதிசயம் நீங்கள்.
விடைத்தாள் வாங்கும்முன் அவசர அவசரமாக எழுதும் மாணவனைபோல் ...99 வயதிலும் எழுதிக்குவித்த நூறாண்டு அதிசயம் நீங்கள்.....
ஆம் இந்த நூற்றாண்டின் அதிசயம் நீங்கள்.
கரிசல் பூமியின் அண்டரெண்டப்பட்சி தன் மிச்ச கதைகளை சொல்லிய பின் மாயமானாய் மறைந்த தினம் மே17. We miss you 😭🙏