Busy mom of cute two

வெள்ளி, 1 அக்டோபர், 2021

கி.ரா என்றொரு அதிசயம்

  கி.ரா என்றொரு அதிசயம்😇


நைநா என்று அன்புடன் அழைக்கின்றனர்
எந்த அப்பாவும் சொன்னதில்லை , பொருள் சேர்க்காதே...சேர்த்து வைக்கும் எறும்பும் தேனியும் பறிகொடுக்கும் என்று ... அதிசய அப்பா நீங்கள்.

தாத்தா என்று கூப்பிட்டு நேசிக்கும் பேரன்பேத்திக்கு எந்த தாத்தாவும் சொல்லப் போவதுமில்லை
பறவைகள் என்ன திருமணமா செய்துகொள்கிறது? பறவையை போல் வாழ் என்று....அதிசய தாத்தா நீங்கள்.

பேசக்கூடாததை பேசி வழக்குகள் வாங்குவோர் மத்தியில் அச்சிலேற்ற முடியாததை கைப்பிரதியாய் எழுதிய அதிசய அண்டரெண்டபட்சி நீங்கள் .

7வது படித்த வேறெவராவது பேராசிரியர் ஆக முடியுமா?!?! அறிவின் அதிசயம் நீங்கள்.

விடைத்தாள் வாங்கும்முன் அவசர அவசரமாக எழுதும் மாணவனைபோல் ...99 வயதிலும் எழுதிக்குவித்த நூறாண்டு அதிசயம் நீங்கள்.....

ஆம் இந்த நூற்றாண்டின் அதிசயம் நீங்கள்.

கரிசல் பூமியின் அண்டரெண்டப்பட்சி தன் மிச்ச கதைகளை சொல்லிய பின் மாயமானாய் மறைந்த தினம் மே17. We miss you 😭🙏
MAY 18
Instagram
Log In
நேரம் அக்டோபர் 01, 2021 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

வியாழன், 12 ஆகஸ்ட், 2021

ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி

 May15 2021, Chennai.

கட்டிலுக்கும் கால் முளைக்கும்👣
படுத்துறங்கும் பாய் கூட பறவை ஆகும் 🕊️
ஆனால் உயரப் பறந்ததென்னவோ 💭🦋
நான் தான்
தாத்தா பாட்டி கதைகள் சொன்ன  இரவுகளில்...🌝🌜⭐
🌛

கதைகள் சொல்லும் தாத்தா பாட்டி கிடைத்த குழந்தைகள் எல்லோருமே பாக்கியசாலிகள், நானும் அந்த வரம் பெற்றவள் 😇

என் இரண்டு தாத்தாக்கள் தான் என் இனிய கதை சொல்லிகள். 
முதலில் என் அப்பாவின் அப்பா ,  அவர் retired headmaster... கதை சொல்லுங்க தாத்தா னு கேட்க வாயெடுக்கும் முன் தன்னுடைய பாட்டன் பூட்டனுடைய கதைகளை சொல்லுவார். அங்காளி பங்காளி அத்தனை பேரையும் அவர்களது ஊரையும் சொல்லி கொடுப்பார்.  எங்கே என்னுடைய தாத்தா பேரை சொல்லு பார்போம், என் ஒன்று விட்ட தம்பிகள் எத்தனை பேர், யார் யார் ? என் மூளைக்குள் கேள்விக்கணை தொடுப்பார்.  தனக்கு உதவி செய்தவர்களை மறக்காமல் குறிப்பிடுவார். இப்படி வருடம் முழுக்க அவருடன் உற்சாகமாய் கழியும்...

பள்ளி விடுமுறையில் அடிக்கும் எனக்கு real jackpot ,  அம்மாவின் அழகான கிராமம் நேமம் ... தாத்தா பாட்டி இருவருமே சளைக்காமல் கதை சொல்வார்கள்... இரவில் மட்டுமில்லை ... சாப்பாடு ஊட்டும் போது , மதிய உணவிற்கு பின்  என பட்டியல் நீளும், கூடவே என் மகிழ்ச்சியும்.

உம்ம்  கொட்டிக்கொண்டே நான் தூங்கிய நாட்களும் உண்டு. என் தம்பி தங்கைகளுக்கோ புதிய புதிய கதைகள் வேண்டும்.
ஆனால் எனக்கென்னவோ கேட்ட கதைகளையே திரும்ப கேட்பதில் ஒரு சந்தோஷம். 
பழசு புதுசு கணக்கே கிடையாது கதைகள் விஷயத்தில். கதை சொல்லும் விதம் தான் முக்கியம். அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா பாட்டி இழுக்கும் ராகத்திற்கேற்ப ம்ம்ம்ம் என்போம்.

சில வருடங்களில், நீ தான் வளர்ந்துட்டியே , புத்தகம்லாம் படிக்க கத்துகிட்டியே  ...இனி நீ தான் எங்களுக்கு கதை சொல்லனும் என்றனர். "சே ...ஏன்டா வளர்ந்தோம்"னு இருந்தது.

புத்தக வாசிப்பை பற்றி "தாத்தா வீட்டுத் திண்ணையில் எண்ணிலடங்கா புத்தகங்கள்" னு வேறு கதையில் சொல்கிறேன்.

என்னை பொறுத்தவரை குழந்தை வளர்ப்பில்  தாய்பாலுக்கு நிகரானது  தாலாட்டு. சத்துணவு போன்றது கதைகள். சோற்று
கவளத்துக்குள் காய் மறைத்துவைத்து கொடுப்பதுபோல் கதைகளுக்குள்  moral 😁

கதைகள் மூலம் வாழ்வை புரியவைத்து , நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து , மகிழ்ச்சியாக வாழவும் சொல்லிக்கொடுத்த அம்மா அப்பா,  பாட்டி தாத்தாவுக்கு 🙏🙏🙏🙏🙏🙏




நேரம் ஆகஸ்ட் 12, 2021 2 கருத்துகள்:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

தாலாட்டு 🤰🤱👶😴😇

ஆரா...ரோ...     ஆரி....ரரோ....
ஆரா...ரோ...    ஆரிவரோ (யார் இவரோ)
நீ ஆளப்பிறந்தவரோ
நீ அரசாளவந்தவரோ

நா பெத்தெடுத்த ரத்தினமே
ஆரடிச்சு நீ அழுத 
அடித்தவர சொல்லி அழு 
ஆக்கினைகள் செஞ்சிடலாம்
கைகாட்டி நீ அழுதா
அவருக்கு கை விலங்கும் பூட்டிடுவேன்

மாமன் அடித்தானோ
மல்லிப்பூச் செண்டாலே
அத்தை அடித்தாளோ
அல்லிப்பூத் தண்டாலே
சித்தி அடித்தளோ
செண்பகப்பூச் செண்டாலே
பாட்டி அடித்தாரோ
பால் வார்க்கும் சங்காலே

ஆரடிச்சு நீ அழுத 
அடித்தவர சொல்லி அழு 
ஆக்கினைகள் செஞ்சிடலாம்
கைகாட்டி நீ அழுதா
அவருக்கு கை விலங்கும் பூட்டிடுவேன்

கண்ணாண கண்ணே நீ
கண்ணுறங்கு கண்ணனுக்கு
ஆரா...ரோ...     ஆரி....ரரோ....
ஆரா...ரோ...    ஆரிவரோ

அம்மாவும்  பாட்டியும் எனக்கு பாட, இப்போது நான் என் குழந்தைகளுக்கு பாடுகிறேன்😍 தாலாட்டு கேட்கும் குழந்தைகள் சீக்கிரமாக பேசுகிறார்கள்.
என் மகள் மற்றும் மகனுக்கு முறையே 6 & 4 வயதாகிறது. வளர்ந்த குழந்தை கூட இந்த பாடல் கேட்கும் பொழுது தூங்கும் நேரம் என புரிந்து கொண்டு அமைதியாக படுக்க பழகிவிடுகிறார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக அம்மாவும் பிள்ளை பினைப்பு தாலாட்டின் மூலம் இறுகுகிறது. இது என் இனிய அனுபவம்.










நேரம் ஆகஸ்ட் 12, 2021 கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

22/5/2025 இன்று போலவே அன்றும் (22/5/2015) அமைதியாய் விடிந்தது வயிற்றில் சுமக்கும் என் தங்கத்தை அன்றிரவே கையில் ஏந்த போகிறேன் என்று காலையில் ...

  • ஊரடங்கு என் குருவிப் பார்வையில் #LockdownTales
    This post has been published by me as a part of the fifty-ninth edition of the online marathon of Bloggers;  Share Your #LockdownTales  ஊரடங...
  • Sunday சண்டை
    நான் ஒரு IT HR,  வேலை முடித்து  வீடு திரும்பினேன்,  உள்ளே நுழைந்ததும் நுழையதாதுமாக கண்கள் தேடுவது பிள்ளைகளையும், கணவரையும். நான் பெற்ற மக்கள...
  • நினைவலைகளில் பாட்டி
     #சண்முகம் பாட்டி  பேரை கட்டதும் கண்ணீர் வந்துவிடும் என்னவருக்கு, பாசக்கார பேரன்.  வேலைக்கு செல்லும் மகள்களுக்கு ஒத்தாசையாக பிள்ளைகளை கவனித்...

இந்த வலைப்பதிவில் தேடு

  • முகப்பு

என்னைப் பற்றி

எனது படம்
PooraniShanmuganathan
வணக்கம் நண்பர்களே... இந்த Blogname என் சுருக்கமான description. நான் பூரணி.சென்னையில்பிறந்த, மாசறு மதுரையின் மருமகள். படிப்பு B.Tech (IT), ஆர்வமோ தமிழ் மற்றும் சித்த மருத்துவம். எழுதும் ஆசையில், கலர் பென்சில் கிடைத்த குழந்தையாய் தோன்றுவதை எல்லாம் கிறுக்க ஆரம்பிக்கிறேன். பதிவுகளிள் தவறுகள் ஏதும் இருந்தால் மன்னிக்கவும்.Please share your thoughts in comments section here. நன்றி.
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

முறைகேடு எனப் புகாரளி

லேபிள்கள்

  • My cookbook

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (2)
    • ►  மே (2)
  • ►  2024 (2)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2022 (1)
    • ►  மார்ச் (1)
  • ▼  2021 (3)
    • ▼  அக்டோபர் (1)
      • கி.ரா என்றொரு அதிசயம்
    • ►  ஆகஸ்ட் (2)
      • ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி
      • தாலாட்டு 🤰🤱👶😴😇
  • ►  2020 (7)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (1)
    • ►  ஏப்ரல் (5)
எத்ரியல் தீம். Blogger இயக்குவது.