நான் ஒரு IT HR, வேலை முடித்து வீடு திரும்பினேன்,
உள்ளே நுழைந்ததும் நுழையதாதுமாக கண்கள் தேடுவது பிள்ளைகளையும், கணவரையும்.
நான் பெற்ற மக்கள் செல்வங்களை கொஞ்சி முடித்து, இவரை பார்த்து சிரித்துக்கொண்டே மூன்று நாட்கள் விடுமுறை என்றேன் 😘
இவரிடமும், பிள்ளைகளிடமும் நேரம் செலவிடலாமே என்று நினைத்துக்கொண்ட மகிழ்ச்சியாய் நான்....
ஒதுங்க வைக்க வீடும், துவைக்க துணிகளும் , ஓய்வெடுக்க உடலும் கெஞ்சுவதை பொருட்படுத்தாமல்
3 நாளா , அதுதான் என் பயமே என்றார்🫣
ஏன் என்னாச்சு, புரியாமல் 😡 கோபமாய் நான்
லீவ் விட்டா சண்டை தானே வரும்! 🥺 என்றார் பெரிதாய் அலட்டிகொள்ளாமல்
My mind voice: (நாம என்ன புருஷன் கூட அர்த்தமில்லாமல் சண்டை செய்யும் சாதாரண பெண்ணா, அறிவு மிக்க புதுமை பெண்ணாயிற்றே)
இந்த பிம்பத்தை மாத்துறோம்... இன்னிக்கே மாத்துறோம்....
விட்டத்தை பார்த்து விட்டேத்தியாய் பேசியவரை நான் விருப்பமுடன் பார்த்து சொன்னேன் --- " ம்ம்ஹ்ம்ம் இந்த லீவ் நாம எந்த சண்டையும் போடவே கூடாது, let's challenge ourselves உள்ளங்கையை காட்டியப்படி கேட்டேன், Love and love only ஓகேயா... "
நாம சண்டை போடாமட்டோம் தான்....நீ
தான் சண்டை ஆரம்பிப்ப , அப்புறம் நான் SORRY கேப்பேன்... இதுதானே நடக்குது....
ஒரு idea, பேசாம நீயே உன்ன challenge பண்ணிக்கோ என்றார்
இந்த பிளாட் ட்விஸ்ட் ல் அதிர்ந்தே போனேன்... என்கூட சேர்ந்து நல்லா பேச கத்துக்கிட்டார்.... உள்ளுக்குள் திட்டினேன்.
சரி நம் அகராதி பிடித்த அகராதியில் sorry யை சேர்த்துக்கொள்வோமா என்று யோசிக்க ஆரம்பித்தேன்
Sorry, please forgive me, Thank you, I love you... எல்லாம் சேர்த்தாகி விட்டது....
வாழ்க்கை இனிமையை சேர்த்துக்கொண்டது😍🤗
கொஞ்சம் பொறுமையா பேசினா தெரியுது இவர் நல்லவர் தான் போல !!!
அதுக்கு மொதல்ல அவர பேச விடணும் ல!?!
இது புரிய கொஞ்சமே கொஞ்சம் தாமதம் ஆயிடுச்சு.
P. S திருமணம் ஆகி வெற்றிகரமான 11 வருடங்கள்.....
Good flow and memory to write this, also hats off for accepting the facts and putting forward the same. All the best a good fortune awaits as a writer
பதிலளிநீக்கு